வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக்கு வந்த சென்னை எழும்பூர் திமுக கவுன்சிலர் ஆனந்தன்மாரடைப்பால் இறந்தார்.
மாநகராட்சித் தேர்தலில் எழும்பூர் பகுதி 99-வது வார்டில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்ஆனந்தன். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்றுவாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலித்ததையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மாலையில் இறந்தார்.
இறந்த ஆனந்தன் வருமான வரித்துறையில் வேலை பார்த்து வந்தவர். தேர்தலில் நிற்பதற்காக அந்தப் பணியைராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications