சாட்சி சொல்ல வந்த ரவுடியை வெட்டிக் கொன்ற ரவுடிகள்: தாதா வீரமணிக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்திருந்த ரவுடியை கடத்திய போட்டிரவுடிக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியது.

இது தொடர்பாக அயோத்திக் குப்பம் தாதா வீரமணி உள்ளிட்ட நான்கு பேரைபோலீஸார் தேடி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் அப்பகுதியில்ரவுடியாக இருந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் கோர்ட்டில் உள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சி சொல்வதற்காகசண்முகம் வந்திருந்தார். அப்போது வெடிகுண்டு வழக்கு ஒன்று தொடர்பாகஅயோத்திக்குப்பம் வீரமணி (திமுக பேரணியின்போதுஏற்பட்ட வன்முறைக்குக்காரணம் இவர்தான் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்)கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கில்வந்திருந்தனர்.

சாட்சி சொல்ல வந்த சண்முகத்தை பார்த்தவுடன் வீரமணி கும்பலைச் சேர்ந்த 4 பேர்அவரை அங்கிருந்து டாடா சுமோ கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு அவரை சரமாரியாகஅரிவாள்களால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சண்முகத்தை அங்கேயேபோட்டுவிட்டு அக்கும்பல் அங்கிருந்து சென்றது.

படுகாயமடைந்த சண்முகம் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஆட்டோ ஒன்றைப்பிடித்தராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தகவல் கிடைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார்விரைந்து வந்தனர். அவர்களிடம் தன்னைத் தாக்கியது வீரமணி, செந்தில், ராமு, குமார்ஆகியோர்தான் என்று சண்முகம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+