கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை: ஜெ.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாகக் கூறப்படும் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள்அர்த்தமற்றவை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. என்னுடையஎதிர்பார்ப்புகளுக்கு மாறாக இத்தேர்தலின் முடிவுகள் அமைந்துவிட்டன.
மாநகராட்சிகளிலோ நகராட்சிகளிலோ தலைவராக இருப்பவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஅனைத்து அதிமுகவினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர் என்று கருணாநிதி தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.
இதற்கெல்லாம் பதில் கூறி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் இத்தகையகுற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications