வாசன் மீது நீக்கப்பட்ட தமாகா தலைவர்கள் பாய்ச்சல்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அக்கட்சியின் தலைமையை சுயநலவாதிகள் என்றுவிமர்சித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின் போது கட்சியின் வெற்றிக்கு எதிராக வேலை பார்த்ததாகக் குற்றம்சாட்டி ஜோதி,விஜயன் மற்றும் முனவர் பாஷா ஆகியோர் நேற்று (திங்கள்கிழமை) கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதுகுறித்து இன்று அந்த 3 பேரும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்கூறியிருப்பதாவது:
கட்சிக்கு உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சீட் கேட்டதால் நாங்கள் கட்சியிலிருந்துநீக்கப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தால் கட்சி இன்னும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கும்.
மேலும் தமாகாவுக்குச் சாதகமான பல இடங்களைக் கூட்டணிக் கட்சி எடுத்துக் கொண்டதால், தமாகாவின் ஓட்டுவங்கி காங்கிரசுக்குப் போய் விட்டது. கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுக தமாகா தலைவர்களைச் சந்திக்கவேமறுத்தது.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.
இந்நிலை நீடித்தால் நாளுக்கு நாள் உண்மைத் தொண்டர்கள் தமாகாவிலிருந்து விலகி காங்கிரசில் வந்துசேர்வார்கள். நாங்களும் தற்போது காங்கிரசில் சேரத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் அந்த அறிக்கையில்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications