பாக். அணு ஆயுதங்களைக் கடத்த அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரபின் அரசு கவிழ்ந்தால் அங்குள்ள அணு ஆயுதங்களை இஸ்ரேலியகமாண்டோக்களின் உதவியுடன் கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் ரகசிய கமாண்டோ படையான யூனிட்-262வுடன் இணைந்து இதற்கான பயிற்சியில் அமெரிக்கக்கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். யூனிட்-262 அரசியல் எதிரிகளைக் கொல்வதிலும் அவர்களிடமிருந்துஆயுதங்களைத் திருடுவதிலும் தேர்ந்த பயிற்சி பெற்ற கமாண்டோ பிரிவாகும்.
பென்டகனின் கட்டுப்பாட்டில் சி.ஐ.ஏவின் மேற்பார்வையில் இந்த கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க-இஸ்ரேலியகமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானிடம் 24 அணு குண்டுகள் இருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது.இவற்றை எப்-16 விமானங்கள் மூலமாகவோ அல்லது ஏவுகணைகள் மூலமாகவோ செலுத்த முடியும்.
முஷாரப் ஆட்சி கவிழும்பட்சத்தில் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய கமாண்டோ படை பாகிஸ்தானில் நுழையும். இந்தஆயுதங்களை செயல் இழக்கச் செய்யும். தேவைப்பட்டால் அவற்றைக் கடத்திச் செல்லும்.
ஆனால், இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அமெரிக்காவிடம் முழுத் தகவல் இல்லை. இந்தத்தகவலைத் திரட்டும் பணியில் சி.ஐ.ஏ. ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் மிக மூத்த 2 அணு விஞ்ஞானிகளை கைது செய்து அரசு விசாரணை நடத்தியதுமுக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விஞ்ஞானிகளுக்கும் தலிபானகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக்கண்டறிந்த அமெரிக்கா, இவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்குதல் தந்தது.
இதையடுத்து இவர்களை கைது செய்து பாகிஸ்தான் விசாரித்தது.












Click it and Unblock the Notifications