தீவிரவாதிகள் மீண்டும் தாக்கலாம் - அமெரிக்கா அச்சம்
வாஷிங்டன்:
அடுத்த ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்று அமெரிக்காவின்அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராப்ட் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐயும் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறுகேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பிற இடங்களில் அமெரிக்காவுக்குச் சொந்தமான இடங்களிலும் தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதிலிருந்தே தீவிரவாதிகள் அமெரிக்கர்களுக்குஆந்த்ராக்ஸ் பவுடர்கள் அடங்கிய தபால்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. இதனால் சில அமெரிக்கர்களும்இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்துஅமெரிக்கர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே நியூயார்க் நகரிலிருந்து டல்லாசுக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்ஒன்று, மிரட்டல் காரணமாக வாஷிங்டன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறங்கியது. பயணிகள்அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அந்த விமானத்திலேயே ஒரு மிரட்டல் எச்சரிக்கைக் கடிதம் கிடந்ததையடுத்துதான் இந்த போயிங் 757 ரகவிமானம் வாஷிங்டனில் அவசரமாகத் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications