பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருக்க வேண்டும்: ராணுவ அதிகாரி
ஜம்மூ:
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும்என்று இந்தியாவின் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல்ஆர்.கே. நானாவதி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மூ-காஷ்மீரில் இப்போது 1965ம் ஆண்டு இருந்த நிலை காணப்படுகிறது. இதனால்,பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டியநிலை உருவாகியுள்ளது.
இரு நாடுகளிலும் அணு ஆயுதம் இருப்பது முன்பு இருந்த நிலைமையை மாற்றியுள்ளது.ஆனால், போருக்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே ,அரசியல் ரீதியாகவும், பொருளாதரா ரீதியாகவும் பாகிஸ்தானின்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
அவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அது அவர்களுக்குத்தான்ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் செயல்பட வேண்டும் என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications