பரமக்குடி துணைத் தலைவர் தேர்தலில் திமுகவினர் முறைகேடு - தமாகா தர்ணா
பரமக்குடி:
பரமக்குடி நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் திமுகவினர் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, தமாகாவினர்தர்ணாவில் ஈடுபட்டனர்.
பரமக்குடி நகராட்சி துணைத்தலைர் பதவிக்கு நேற்று (புதன்கிழமை) தேர்தல் நடந்தது. திமுக சார்பில் முன்னாள்திமுக எம்.எல்.ஏ., திசை வீரனும், தமாகா சார்பில் மொட்டையனும் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவின்போது மொட்டையன் தனது வாக்குச் சீட்டை வாங்கித் தாமாறாகக் கிழித்துவிட்டார். இதனால்அவரது ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது.
பிறகு ஓட்டு எண்ணிக்கையின் போது திமுகவுக்கும், தமாகாவுக்கும் சம அளவில் ஓட்டுக்கள் கிடைத்தன. இதனால்குலுக்கல் முறையில் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. குலுக்கலில் திமுக வேட்பாளர் திசைவீரன்வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பைக் கேட்டதும், மொட்டையன் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். இதையடுத்து,தமாகாவினர் ஒன்று கூடி, திமுகவினர்தான் மொட்டையனின் மனநிலையைப் பாதிக்கச் செய்து, அவரை செல்லாதஓட்டுப் போட வைத்துவிட்டனர் என்று புகார் கூறினர்.
பிறகு அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications