டான்சி அப்பீல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
டான்சி அப்பீல் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா வாங்கியது தொடர்பாக அவர் மீது வழக்குதொடரப்பட்டது.
தனி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதன்காரணமாக கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாமல் போனது.
இந்த நிலையில் தனக்கு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல்செய்தார் ஜெயலலிதா. அப்பீல் மனுவை நீதிபதி தினகர் விசாரித்து வந்தார்.
இந்த விசாரணை புதன்கிழமையுடன் முடிவடைந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தினகர் அறிவித்தார்.
17 நாட்களுக்கு இந்த வழக்கில் விசாரணை நடந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பைப் பொறுத்தே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications