கர்நாடகா: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி 22 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜப்பூர்:
பீஜப்பூர் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
இந்த டிரக்கில் 60 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பெங்களூர் நோக்கி இரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த லாரி பீஜப்பூர் அருகே எதிரேவந்த அந்த டிரக்குடன் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் 18 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேறு 4 பேர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இறந்தவர்களில் 5 பெண்களும் 6 குழந்தைகளும் அடக்கம்.
காயமடைந்த 24 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications