ஆசியாவின் மிகப் பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு
சென்னை:
சென்னை அருகே கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையம் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
சென்னைப் புறநகர் பகுதியான கோயம்பேட்டில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி மதிப்பில் இந்தபஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்கள்அனைத்தையும் இங்கிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் இங்கிருந்து சென்று வர முடியும். ஆயிரக்கணக்கான பயணிகளை ஒரேநேரத்தில் இங்கு கையாள முடியும்.
பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. ஜனவரி 15ம் தேதி இந்த பஸ் நிலையம் திறக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ் நிலையம் வந்தால் நகரில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications