முன்னாள் ஆப்கான் மன்னரின் ஆதரவாளர்களைத் தூக்கிலிட தலிபான்கள் திட்டம்
இஸ்லாமாபாத்:
தாங்கள் பிடித்து வைத்துள்ள ஆப்கான் முன்னாள் மன்னர் முகம்மது ஜாஹிர் ஷாவின் ஆதரவாளர்கள் 25 பேரைத்தூக்கிலிடுவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவரது ஆதரவாளர்கள் 25 பேரைத் தலிபான்கள் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களைத்தூக்கிலிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆப்கான் இஸ்லாமிக் பிரஸ் என்ற பத்திரிக்கைவெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
பிடிபட்டுள்ள அனைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹமித் கர்ஷாயின் நெருங்கிய கூட்டாளிகள். கர்ஷாய்சமீபத்தில் தலிபான்களால் தூக்கிலிடப்பட்ட அப்துல் ஹக்கைப் போல, தலிபான் எதிர்ப்பாளர் ஆவார்.
கர்ஷாய் தற்போது தலைமறைவாக உள்ளார். நேற்று தேஹர்வாட் என்ற இடத்தில் அவர் ஒளிந்திருப்பதாக வந்ததகவலை அடுத்து, தலிபான்கள் அந்த இடத்திற்குச் சென்றார்கள்.
அப்போது அமெரிக்க படையைச் சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் கர்ஷாயைக் காப்பாற்றின. அப்போது நடந்தசண்டையில் கர்ஷாயின் 4 ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். கர்ஷாயைப் பிடித்துத்தூக்கிலிடுவதே தலிபான்களின் நோக்கமாகும்.
இன்று இரவுக்குள் தலிபான்கள் பிடித்து வைத்துள்ள 25 பேரில் சில முக்கியமானவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்என்று தெரிகிறது.
ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தலிபான்கள்
பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயீப் கூறுகையில்,
நேற்று முன்தினம் அமெரிக்கைப் படைக்குச் சொந்தமான ஒரு ஜெட் விமானத்தை எங்கள் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர். அந்த விமானம் பால்க் மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அந்தஇடத்தில் அதன் பைலட் இறந்ததற்கான அடையாளங்கள் இல்லை. எனவே அது ஆளில்லாத விமானமாகஇருக்கலாம்.
ஆனால் பெண்டகள், தங்கள் நாட்டு விமானம் எதுவும் ஆப்கானிஸ்தானில் காணாமல் போகவில்லை என்கிறது.அது அவர்களது கடமை. அர்கள் அப்பபடித்தான் சொல்வார்கள்.
அப்பாவிப் பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு, இல்லை என்றார்கள். ஆனால் அதுபத்திரிக்கைகாரர்கள் கண் முன்னாள் தான் நடந்தது என்றார் அப்துல்.












Click it and Unblock the Notifications