புதுக்கோட்டை அருகே பட்டாசு வேனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற வேனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியானார்கள்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து ஜோலார்பட்டிணத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) ஒரு வேன்பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
வேனை ஓட்டிச் சென்றவர்கள், வழியில் காரைக்கால் அருகே ஒரு கடையில் நிறுத்தி சற்று ஓய்வு எடுத்தனர்.அப்போது அந்த வேனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க ஆரம்பித்தன. பலத்த சத்தத்துடன் தீப்பிளம்புகள்வேனைவிட்டு வெளியே வந்தன.
அப்போது வேனருகில் நின்றுகொண்டிருந்த, காரைக்காலைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் சரவணன் ஆகிய 2மீனவர்களும் தீயில் கருகி பலியானார்கள்.
இவர்களைத் தவிர வேனுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள்அனைவரும் தற்போது தஞ்சை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications