ஊட்டி மலைப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

குன்னூர்:

மழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தடைபட்டிருந்த குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதை ரயில்போக்குவரத்து இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் துவங்கியது.

கடந்த மாத இறுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் ஆங்காங்கே மண் சரிவுஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குச் செல்லும் மலை ரயில் பாதையில் உள்ளதண்டவாளம் 120 அடி தூரத்திற்கு மண்ணால் மூடப்பட்டு விட்டது.

இதையடுத்து, அக்டோபர் 27ம் தேதி முதல் இப்பாதையில் ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே நிறுத்திவிட்டது. இதனால் ஊட்டி செல்ல வேண்டிய சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர்.

இந்த ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியை தென்னக ரயில்வே உடனே மேற்கொண்டது. நூற்றுக்கும் மேற்பட்டபணியாளர்கள் ரயில் பாதையில் உள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினமே தண்டவாளத்திலிருந்த மண்ணை அகற்றும் பணி முடிவடைந்தது. பிறகு நேற்று இப்பாதையில்ஒரு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இதையடுத்து, இன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்துஆரம்பிக்கப்பட்டது. ஊட்டிக்குச் செல்ல முடியாமல் ஒரு வாரமாக அவதிப்பட்ட சுற்றுலா பயணிகள் தற்போதுமிகுந்த சந்தோஷத்துடன் மலைப் பாதை ரயிலில் பயணம் செய்கின்றனர்.

ஊட்டியில் குளிர் கால சீசனும் ஆரம்பித்து விட்டதால் போகப் போக ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. தற்போதே ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஊட்டிக்கு வந்துகுவிந்து கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+