காதுகள் டமார்: ஏர்-ஹார்னுக்குக் கோவையில் தடை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் காற்று ஒலிப்பானை (ஏர் ஹார்ன்) பயன்படுத்த போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் முருகானந்தம் கூறுகையில், கோவை போன்ற பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.
விதவிதமான வாகனங்களிலிருந்து ஒலிக்கப்படும் ஒலிப்பான்கள் (ஹார்ன்கள்) காதைப் பிளக்கின்னற, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன,பதற்றத்தை உருவாக்குகின்றன.
இந்த நிலையில் கோவை போலீஸார் நகர எல்லைக்குள் காற்று ஒலிப்பானை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. மீறி காற்று ஒலிப்பானைபயன்படுத்துபவர்களிடம் 5 ஆண்டு சிறை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் காற்று ஒலிப்பானை யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications