தேர்தல் வன்முறை: அதிமுக அரசைக் கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரதம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளுக்குக் காரணமான அதிமுக அரசைக் கண்டித்து காங்கிரசார்சென்னையில் இன்று (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழககாங்கிரஸ் வர்த்தகப் பிரிவின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட காங்கிரசார்கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர், போலீசார் துணையுடன் வன்முறையில் ஈடுபட்டனர். அதற்குஎதிர்ப்புத் தெரிவித்து சாத்வீகமான முறையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.
தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.விரைவில் காமராஜர் ஆட்சி, தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்.
அதிமுகவினர் ஓட்டுப் பதிவின் போது மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின் போதே வன்முறையில் ஈடுபட்டுவந்தனர். இவர்களுக்குப் போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதிமுகஅரசின் வன்முறைப் போக்கைக் கண்டிக்கிறோம்.
வன்முறையை கையில் எடுப்பவர்கள் வன்முறைக்கே இரையாவார்கள் என்பது வரலாறு. அதுதான்அதிமுகவினருக்கும் நடக்கப் போகிறது.
திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடமிருந்து தொலை தூரத்தில் இருக்கவே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. நாங்கள்இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்வெளிப்படுத்தியுள்ளன
இவ்வாறு அவர் பேசினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் தமிழ் தேசக் கட்சியின் தலைவர் கண்ணப்பன்,காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன்" உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தது. மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications