சிறுவனின் ஆபரேஷனுக்கு ஜெ. ரூ. 90,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவையைச் சேர்ந்த சிறுவனின் இருதய ஆபரேஷனுக்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ரூ. 90,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
கோவை தெலுங்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன்ஜெயக்குமார். 11 வயது சிறுவனான ஜெயக்குமாருக்கு இருதயத்தில் ஓட்டைஇருப்பதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள்தெரிவித்தனர்.
ஆனால் சங்கரனிடம் ஆபரேஷன் செய்வதற்குத் தேவையான பண வசதி இல்லை.இதனால் அவரால் ஆபரேஷனுக்கு சம்மதிக்க முடியவில்லை. இதையடுத்துஜெயக்குமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயலலிதாவுக்குஅதிமுகவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயலலிதா உடனடியாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.90,000 பணத்தை ஒதுக்கி உதவியுள்ளார். இதற்காக ஜெயலலிதாவைச் சந்தித்து சங்கரன்நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications