தேர்தல் தோல்வி குறித்து பா.ம.க செயற்குழுக் கூட்டத்தில் விவாதம்
திண்டிவனம்:
உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்பதுகுறித்தும் அக்கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கப்பட்து.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம், திண்டிவணம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. செயற்குழுக் கூட்டத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தொடங்கிவைத்தார்.
கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். எம்.பிக்கள் இளங்கோவன், மூர்த்தி, துரை,சண்முகம், பொன்னுச்சாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது,
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நான் தெரிவிக்க இயலாது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துசெயற்குழு உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டது என்றார்.
ஆனால் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்தும், திமுகவினர் ஒத்துழைப்புத் தராததுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று (சனிக்கிழமை) கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும்.