For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானின் வடகிழக்குப் பகுதிகளில் பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை அமெரிக்கப் போர் விமானங்கள் கடும் தாக்குதலைமேற்கொண்டன.

ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. இதில் கடந்த ஒருவாரமாக பி-52 ரக போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக தஜிகிஸ்தானை ஒட்டிய ஆப்கானின் வடகிழக்குப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள்தீவிரத் தாக்குதல்கள் நடத்திவருகின்றன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்தப் பகுதிகளில் பி-52 ரக விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. 2 மணிநேர இடைவெளியில் சுமார் 20 குண்டுகள் இதே பகுதியில் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளன.

ஆப்கானின் தெற்குப் பகுதியில் தான் இதுவரை பி-52 ரக விமானங்கள் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டுவந்தன. இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் தான் முதல் முறையாக, வடகிழக்குப் பகுதியில் இந்த ரகவிமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தலிபான்களை கடுமையாக எதிர்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும், தங்கள்படைகளை இந்தப் பகுதிகளில் குவித்து வருகின்றனர்.

நார்தர்ன் அலையன்ஸ் பிரிவினர் ஆப்கானின் மொத்தப் பரப்பில் 10 சதவீத பகுதிகளை ஆட்சி செய்துவருகின்றனர். இருப்பினும், தற்போது காபூல் உள்ளிட்ட முக்கிய தலிபான் நகரங்களைப் பிடித்து விடுவோம் என்றுநம்பிக்கை தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X