கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு: போனஸ் தர பணம் இல்லை
சென்னை:
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 11 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே அரசுதிண்டாடி வருகிறது.
கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட அரசிடம் பணமில்லை. இதனால், கவர்னர்அனுமதியுடன் ரிசர்வ் வங்கியிடம் முன் பணம் பெற்றுத் தந்ததால் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில தீபாவளிப் பண்டிகை வருகிறது. வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மட்டுமின்றிமுன் பணமும் வழங்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு போனஸ் வழங்கவே பணம் இல்லாததால், முன் பணம் கொடுக்க இயலாது என அரசுஅறிவித்தது. ஆனால், ஊழியர்களின் போராட்டம் காரணமாக கடை நிலை ஊழியர்களுக்கு மட்டும் முன்பணம்வழங்க அரசு முன் வந்துள்ளது.
தீபாவளி நெருங்கிக் கொண்டிக்கும் நிலையில் போனஸ் இன்னும் கையில் வந்து சேராததால் அரசு ஊழியர்களும்அவர்களின் குடும்பத்தினரும் பெரும் ஏமாற்றத்தில் ஆழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications