"டெய்ஸி கட்டர் குண்டுகள்" மூலம் தாக்குதல் ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க விமானங்கள் இன்று (புதன்கிழமை) 31வது நாளாக குண்டு வீச்சு தாக்குதலைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. "டெய்ஸி கட்டர் குண்டுகள்" மூலம் பயங்கரமான தாக்குதலை அமெரிக்கவிமானங்கள் ஆரம்பித்துள்ளன.

அணுகுண்டுக்கு இணையான குண்டுத் தாக்குதல்களை அமெரிக்க விமானங்கள் ஆரம்பித்துள்ளன என்றுஅமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

"டெய்ஸி கட்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 6,800 கிலோ எடைகொண்டவை. பாராசூட்டுகள் மூலம் அமெரிக்கவின் சி-130 ரக விமானங்கள் இந்தக் குண்டுகளை வீசின.

550 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளைக் கடுமையாகச் சிதைக்க வல்லவை இந்த "டெய்ஸி கட்டர்குண்டுகள்". தலிபான்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகளையும் குகைகளையும்அழிப்பதற்காகவே இந்தக் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை காபூல் நகரின் வடக்குப் பகுதியில் தலிபான் நிலைகளின் மீது அமெரிக்க விமானங்கள்குண்டுகளை வீசின. பக்ராம் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டே அமெரிக்க விமானங்கள் இன்றைதாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நார்த்தர்ன் அலையன்ஸ்ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்-ஏ-ஷெரீப்பைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களைக்கைப்பற்றியுள்ளதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் அமெரிக்க விமானங்கள் இன்னும் குண்டு வீச்சைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குண்டு வீச்சை அமெரிக்கா தீவிரப்படுத்தினால்தான் தலிபான்களை எளிதாக வெற்றி கொள்ள முடியும் என்றுநார்த்தர்ன் அலையன்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+