திமுக பேரணி வன்முறை - சிபிஐ விசாரணை கோரும் நிருபர்கள்
சென்னை:
சென்னையில் நடந்த திமுக பேரணியின்போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளசுரேஷ் குமார் உள்ளிட்ட 9 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,திமுக பேரணியின்போது திடீரென ஏற்பட்ட வன்றையை செய்தியாகவும், புகைப்படங்களாகவும்பத்திரிக்கையாளர்கள் சேகரித்துக் கொண்டிருந்தபோது, டி.ஜிபி அலுவலகம் அருகேயும், உள்ளேயும்பத்திரிக்கையாளர்களை சூழ்ந்து கொண்டு போலீஸார் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸாரை அணுகினால் விசாரணை நியாயமாக இருக்காது என்பதால்போலீஸாரை பத்திரிக்கையாளர்கள் அணுகவில்லை. எனவே இந்த சம்பவம் குறித்துசி.பி.ஐ.விசாரணைக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றுகூறியிருந்தனர்.
பத்திரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனுவை வழக்கறிஞர் நளினி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மனைவி) தாக்கல்செய்தார். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சந்திரன் ஆஜரானார். மனுவை பரிசீலித்த நீதிபதி சண்முகம்,இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications