பாகிஸ்தானிலிருந்து 41 இந்திய மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 41 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலைசெய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் கடல் பகுதிகளில் சென்று மீன் பிடித்ததற்காக, 196 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் போலீசாரால் கைதுசெய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரிவாஜ்பாய்க்கும் இடையே ஆக்ராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறைகளில்அடைபட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.

இதன்படி கடந்த மாத இறுதியில் 196 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது.முதற்கட்டமாக 155 இந்திய மீனவர்கள் தங்களுடைய 25 படகுகள் மூலம் குஜராத் வந்து சேர்ந்தனர்.

இந்நிலையில் மீதமுள்ள 41 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அம்மீனவர்கள் தங்களுடைய 9படகுகள் மூலம் நேற்று மாலை குஜராத் வந்து சேர்ந்தனர்.

அம்மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் அன்புடன் வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+