மாஸ்கோ ஒப்பந்தத்தில் வாஜ்பாய்-புடின் கையெழுத்து

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

உலக பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய மாஸ்கோ ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்திட்டனர்.

இது தொடர்பான உச்சி மாநாட்டில் வாஜ்பாயும் புடினும் பேசும்போது, உலக நாடுகளின் தீவிரவாத நடவடிக்கைமற்றும் ஆப்கானிஸ்தானில் போருக்குப் பின் ஏற்படவுள்ள அரசு ஆகியவை குறித்து விவாதித்தனர்.

இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான உத்திகளை வகுப்பது குறித்த மாஸ்கோஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கெயெழுத்திட்டனர்.

மேலும் இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையே ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்துவங்கியுள்ளதாகவும் வாஜ்பாயிடம் புடின் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சியை ரஷ்யா மிகக் கூர்மையாகக் கவனித்து வருவதாகவும், அனைத்துத் துறைகளிலும் இருநாடுகளுக்குமிடையேயான உறவு வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் இந்த உச்சி மாநாட்டின்போது புடின்கூறினார்.

கூடங்குளம் ஒப்பந்தம் கையெழுத்தானது

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம்-கூடங்குளத்தில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும்அணுமின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்திலும் இந்தியா-ரஷ்யா நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

2000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த அணுமின் உற்பத்தி நிலையம் 2006-07ம் ஆண்டில் மின்உற்பத்தியைத் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட அணுக்கசிவைத் தொடர்ந்து, கூடங்குளம் திட்டத்திற்குஏற்கனவே பல எதிர்ப்புகள் நிலவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+