பயங்கரவாத எதிர்ப்பு: முஷாரப் தலைமை !!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசவிருக்கும் நாடுகளுக்குத் தலைமைதாங்குகிறார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்.

வரும் சனிக்கிழமை (நவ. 10) நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக இன்று(புதன்கிழமை) காலை முஷாரப் அமெரிக்கா புறப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள பல்வேறுமுஸ்லீம் மதவாதிகளின் அதிருப்திக்கு முஷாரப் ஆளான போதும், அமெரிக்கா விதித்திருந்த பல்வேறு தடைகள்விலகுவதற்கு முஷாரப்பின் இந்த ஆதரவுதான் முக்கியக் காரணமாகியுள்ளது.

இந்நிலையில் முஷாரப் அமெரிக்கா செல்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் அமெரிக்கா செல்லவிருப்பதுபாகிஸ்தானுக்கு மட்டுமில்லாமல் அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

அமெரிக்கா செல்வதற்கு முன் அவர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளைஅவர் நடத்த உள்ளார்.

முஷாரப்பின் திடீர் ஈரான் விஜயம்

இந்நிலையில், பிரான்ஸ் செல்லும் வழியில் முஷாரப் ஈரானுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டார்.

இரண்டு மணி நேரம் ஈரான் தலைநகரமான டெஹ்ரானில் இருந்த முஷாரப், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கதாக்குதல் பற்றியும் பாகிஸ்தான்-ஈரானுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் ஈரான் துணை அதிபர் முகம்மதுரியாசுடன் பேச்சு நடத்தினார்.

அவருடைய பயணப் பட்டியலில் ஈரான் இல்லாததால், முஷாரப்பின் இந்த ஈரான் பயணம் முக்கியத்துவம்வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+