வருவாயைக் கூட்டியது நாங்கள்தான்: கருணாநிதி
சென்னை:
முன்பு இருந்த வருவாயை திமுக அரசுதான் அதிகமாக்கிக் காட்டியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசின் நிதி நெருக்கடிக்குக் காரணம் கடந்த திமுக அரசுதான் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்துகூறிவருகிறார்.
முந்தைய அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசுக்கு 8,985 கோடி வருவாய் இருந்தது. அடுத்து திமுகஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசின் வருவாய் 20,635 கோடியாக அதிகரிக்கப்பட்டது. முன்பு இருந்த வருவாயைஇரண்டு மடங்குக்கு மேலாக உயர்த்தியது திமுக ஆட்சிதான்.
இந்நிலையில் திமுக ஆட்சியில் அரசின் வருவாயைப் பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லைஎன்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
அதிமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த நடவடிக்கைகள்எடுக்கப்படவில்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications