கொடைக்கானல் ஓட்டல் வழக்கு: ஜெ. மனு மீது நாளை முதல் விசாரணை
சென்னை:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்தஅப்பீல் மனு மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்குகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொடைக்கானலில் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு பலமாடிகள் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள்அமைச்சர் செல்வ கணபதி உள்ளிட்டோர் மீது கடந்த திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. செல்வகணபதிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அப்பீல் மனுமீதான விசாரணை வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகர்முன் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications