நக்சலைட் வேட்டையில் போலீஸார் தீவிரம்
சென்னை:
தமிழர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த தமிழ்த் தீவிரவாதிகளை கைதுசெய்யும் பணியில் தமிழக போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை என்ற நக்சலைட் அமைப்பு ஈ மெயில் மூலம்கொலை மிரட்டல் விடுத்திருந்தது. இதையடுத்து இந்த இரு அமைப்புகளையும் தமிழக அரசு தடை செய்தது.மேலும் இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்களைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரு நக்சலைட் அமைப்புகளுக்கும் தமிழகத்தில் பெரிய அளவில் முகாம்களோ, அலுவலகங்களோ கிடையாது.வட மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படும் முந்திரிக் காடுகள்தான் இந்தத் தீவிரவாதிகளுக்கு சிறந்தபுகலிடமாக உள்ளது. குற்றங்களைச் செய்து விட்டு இந்த முந்திரிக் காடுகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதேஇவர்களது வழக்கமாகும்.
மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டுமே தமிழ்த் தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறிப்பிடும்படிஉள்ளன. தென் மாவட்டங்களில் 99 சதவீதம் இப்பிரச்சினை கிடையாது. எனவே, கடலூர், அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்த் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணியில்போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் நக்சலைட்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கிடைக்கும்வகையில் போலீஸ் உளவாளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பில் போலீஸார்இந்த மாவட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.