பெயின்டைக் குடித்த கைதி: நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கைதி ஒருவர் பெயின்டைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளமுயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் ரகு என்ற ரகு குமார். பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அவரைபோலீஸார் கடந்த ஒரு வருடமாக தேடி வந்தனர். ஆனால் போலீஸார் கையில் சிக்காமல் ரகு தலைமறைவாகஇருந்து வந்தார்.
இந்த நிலையில் ரகு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குபோலீஸார் அழைத்து வந்தனர். பிற்பகல் வாக்கில் கோர்ட்டுக்கு வந்த அவர்கள் மாஜிஸ்திரேட்டுக்காககாத்திருந்தனர்.
அப்போது திடீரென ரகு கோர்ட் வளாகத்தில் இருந்த பெயின்ட் டப்பாவை எடுத்து திறந்து அதிலிருந்தபெயின்ட்டைக் குடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக ரகுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு ரகுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications