அமெரிக்காவுக்கு இந்தியா உதவி: தலிபான் புகார்
இஸ்லாமாபாத்:
எங்களுக்கு எதிரான தாக்குதலில் இந்திய, ரஷ்ய ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருக்கும் உதவி வருகின்றனர் என்று தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் பல ஜெனரல்களும், பிரிகேடியர்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும்யோசனைகளை வழங்கி வருகின்றனர்.
எங்களைத் தாக்க உதவி வருகின்றனர். அதே போல ரஷ்ய அதிகாரிகளும் உதவி செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க தூதர்:
இந் நிலையில் அமெரிக்க யோசனையின்பேரில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குள்நுழைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஹமித் கர்ஸாய் இதுவரை பத்திரமாகவே உள்ளார். இவருடன் சென்ற சிலர்தலிபான்கள் கையில் சிக்கி தூக்கில் போடப்பட்டுவிட்டனர்.
ஆனால், இவர் தலிபான்களுக்குத் தெரியாமல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தலிபான்களுக்குஎதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் இருக்கும் இடம் அமெரிக்கர்களுக்கு மட்டுமே தெரியும். சாட்டிலைட்போன் மூலம் அவர் அமெரிக்க ராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு வருகிறார்.
குண்டுவீச்சு தொடர்கிறது:
ஆப்கானிஸ்தானின் மீதான அமெரிக்கத் தாக்குதல் 5வது வாரமாகத் தொடர்கிறது. பி-52 ரக குண்டு வீச்சுவிமானங்கள் மூலம் டெய்ஸி கட்டர் பாம்கள் போடப்படுகின்றன. பாராசூட் மூலம் போடப்படும் இந்த குண்டுவெடித்தால் அரை கி.மீ. தூரம் தூள் தூளாகிவிடும்.
அணு குண்டுக்கு அடுத்தபடியாக மிக பயங்கர குண்டு இது தான்.












Click it and Unblock the Notifications