நாளை முதல் பஸ் ஊழியர்கள் சிறை நிரப்புப் போராட்டம்
சென்னை:
தங்கள் கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தால் நாளை (திங்கள்கிழமை) முதல் சிறை நிரப்புப்போராட்டம் நடத்துவோம் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்ற ஆண்டு கொடுத்தது போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடையவே, மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை. தீபாவளியும் நெருங்கி வருவதால்,பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வோம் என்றுபோக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை முதல் சிறை நிரப்புப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக சி.ஐ.டி.யூ. சங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற சங்கங்களும் இந்த சிறை நிரப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications