உணவுக் கழக ஊழியர்களும் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் இன்று(திங்கள்கிழமை) காலை முதல் போராட்டத்தில் குதித்திள்ளனர்.
இருப்பினும் இந்த ஸ்டிரைக்கிற்கு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக நுகர்பொருள் வாணிப் கழகத்தின் கீழ் வரும் ரேஷன் கடைகள் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இவர்களைத் தொடர்ந்து உணவுக் கிடங்கு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால், 80 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருப்பதாக மாநில உணவுத்துறை அமைச்சர் தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரில் உள்ள சில கிட்டங்கிகளுக்கும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications