அரசியல் கட்சிகள் ஆதரவை நாடும் பஸ் ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் (பந்த்) நடத்த அரசியல்கட்சிகளுக்கு போக்குவரத்து ஊழியர் சங்க கூட்டுப் போராட்டக் குழு கோரிக்கை விடுக்கவுள்ளது.
பொது வேலை நிறுத்தமாக அறிவித்து அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் போராட்டம் தீவிரமடையும் என்றும்,இதன் மூலம் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் ஊழியர்கள் நம்புகிறார்கள்.
இதையடுத்து திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுகேட்க சிஐடியூவைச் சேர்ந்த, போராட்டக் குழு அமைப்பாளர் செளந்தரராஜன் முடிவு செய்துள்ளார்.
பஸ் ஸ்டிரைக்குக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் போராட்டம் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications