தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக் ஒருபக்கம் தீவிரமாகிக் கொண்டுள்ள நேரத்தில் மின்வாரிய ஊழியர்களும்திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
20 சதவீத போனஸ் கோரி இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் மின் கட்டணம் வசூலித்தல், மின்சாரம் தடைபட்டுள்ள இடங்களில் பழுதுபார்த்தல் ஆகியபணிகள் முழுமையாக நடக்கவில்லை.
சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் வாரிய அலுலகங்கள் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணாபோராட்டங்களை நடத்தினர்.
மின்சார வினியோகத்தைத் துண்டிக்க மாட்டோம் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், மின்தடை ஏற்பட்டால் அதைசரி செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் தமிழக மின் உற்பத்தி நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களும் படிப்படியாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தால் தமிழகத்தில் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்படும் என்பது உறுதி.
அப்படிப்பட்ட நிலையில் தமிழகம் முழு இருளில் மூழ்கும்.












Click it and Unblock the Notifications