தீவிரவாதம் இருக்கும் இடம் எல்லாம் போர் தொடுக்க வேண்டும்: வாஜ்பாய்
லண்டன்:
தீவிரவாதத்திற்கு எதிரான போர் பின்லேடனை ஒழிப்பதுடன் நின்றுவிடக் கூடாது என்றும் அதையும் தாண்டி மற்றநாடுகளில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை நீடிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர்வாஜ்பாய் அந்நாட்டுப் பிரதமர் டோனி பிளேரிடம் தெரிவித்தார்.
அப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போருக்கு இந்தியா தரும் ஆதரவுக்கு பிளேர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் காஷ்மீரில் தீவிரவாதிகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்.இதற்கு தீவிரவாதிகள் தரப்பில் என்ன காரணங்கள் சொன்னாலும் அவற்றை ஏற்கமுடியாது என்றும் அவர் கூறினார்.
அப்போது வாஜ்பாய் கூறுகையில், தீவிவாதத்திற்கு எதிரான போர் பின்லேடனை ஒழிப்பதிலும், அவரதுதலைமையிலான அல்-காய்தா இயக்கத்தை அழிப்பதுடனும் முடிந்து விடக்கூடாது.
மேலும் அந்தப் போர் ஆப்கானிஸ்தானுடன் முடிந்துவிடாமல், உலகத்தில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் அனைத்துநாடுகள் மீதும் நடக்க வேண்டும்.
மேலும் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசு, தீவிரவாதத்தை முற்றிலும் எதிர்க்கும் நோக்கம்கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்றார்.
ஆப்கானிஸ் மிதவாத தலிபான்கள் பிரிவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தீவிரவாதத்துக்கு எதிரானபோரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான் கூறிவருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
ஜெட் டிரெய்னர் விமானம்(ஏ.ஜெ.டி)
இந்திய விமானப் படைக்கு போர் பயிற்சி விமானங்களை (அட்வான்ஸ் ஜெட் டிரைனர்) வழங்கத் தயாராகஇருப்பதாக டோனி பிளேர் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா கூறியதாவது, வாஜ்பாயின் இங்கிலாந்து வருகை,ராணுவ சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவதற்காக அல்ல. இருப்பினும் பேச்சுவார்த்தையின் இடையில்இங்கிலாந்து பிரதமர் இந்தியாவிற்கு ஏ.ஜெ.டி. ரக விமானங்களை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதுகுறித்த முழுமையான பேச்சவார்த்தை பிரிட்டிஷ் ராணுவ அமைச்சர் ஜெப் ஹூன் டெல்லிக்கு வரும் போதுதொடங்கப்படும். அவர் நாளை டெல்லிக்கு வர இருக்கிறார் என்றார்.
விரைவில் மீண்டும் இந்தியா வரவும் பிளேர் ஒப்புக் கொண்டுள்ளார்.