கோவில்பட்டி அருகே பஸ்-வேன் மோதி 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இன்று (புதன்கிழமை) அரசு பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 25 பேர்உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குச்சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ் எதிரே வந்த ஒரு வேனுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த வேன்கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வேறு 25 பேர்படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர்தான்இந்த அரசு பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications