திருடனை அடித்தே கொன்ற பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் அருகே குழந்தைகளிடம் நகைகளைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவனைப் பொதுமக்கள்அடித்தே கொண்றுவிட்டனர். மற்ற 2 பேரை பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூர் அருகே உள்ள ஜமுனாப் பள்ளம் என்ற இடத்தில் இன்று (வியாழக்கிழமை)மதியம் 3 பேர் அந்தப் பகுதியில் வந்துகொண்டிருந்த சில சிறுவர்களை மிரட்டி அவன் கட்டியிருந்த கடிகாரத்தைபறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் உதவி கேட்டு கத்த ஆரம்பித்ததையடுத்து, அவர்கள் 3 பேரும் ஓட ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் திருடர்களைப் பிடிக்க அவர்கள் 3பேரையும் துரத்திக் கொண்டு ஓடினர்.

பிறகு ஒருவழியாக 3 பேரையும் பிடித்து பொதுமக்கள் கொடுத்த தர்ம அடியில் ஒரு திருடன் அந்த இடத்திலேயேஇறந்துவிட்டான். மற்ற 2 பேரும் பலத்த காயத்துடன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் திருடர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+