27 பேர் சாவு .. அரசு மீது கருணாநிதி புகார்
சென்னை:
அரசின் வீண் பிடிவாதப் போக்கினால் 27 விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கோவில்பட்டி சாலை விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கைஉடைக்க வேண்டும் என்ற பிடிவாதப் போக்கினால் பயிற்சி பெறாத டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் தேவை என்ற கோரிக்கையுடன் பலமுறை அரசுடன் பேசியும் தீர்வுஏற்படாத காரணத்தால்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால் அதை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயிற்சி பெறாத டிரைவர்களை பணியில் அமர்த்திய காரணத்தால்தான் கோவில்பட்டிவிபத்தில் 27 பேர் இறந்துள்ளனர்.
இனியும் அரசு பிடிவாதம் பிடிக்காமல், வீணான வாதங்களைப் புரியாமல் உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன்பேச்சு நடத்த முன்வர வேண்டும்.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி கைதாகியுள்ள ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையான சுமூக நிலையை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications