27 பேர் சாவு .. அரசு மீது கருணாநிதி புகார்
சென்னை:
அரசின் வீண் பிடிவாதப் போக்கினால் 27 விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கோவில்பட்டி சாலை விபத்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கைஉடைக்க வேண்டும் என்ற பிடிவாதப் போக்கினால் பயிற்சி பெறாத டிரைவர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி வருகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் தேவை என்ற கோரிக்கையுடன் பலமுறை அரசுடன் பேசியும் தீர்வுஏற்படாத காரணத்தால்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
ஆனால் அதை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயிற்சி பெறாத டிரைவர்களை பணியில் அமர்த்திய காரணத்தால்தான் கோவில்பட்டிவிபத்தில் 27 பேர் இறந்துள்ளனர்.
இனியும் அரசு பிடிவாதம் பிடிக்காமல், வீணான வாதங்களைப் புரியாமல் உடனடியாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன்பேச்சு நடத்த முன்வர வேண்டும்.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி கைதாகியுள்ள ஊழியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தேவையான சுமூக நிலையை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications