தமிழக அரசுடன் பேசிய பின்னர் ஆளுநர் நியமனம்: மத்திய அரசு
சென்னை:
மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்துக்கு அடுத்த ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார் என மத்தியஅரசு கூறியுள்ளது.
பாத்திமா பீவி நீக்கப்பட்ட பின்னர் ஆந்திர ஆளுநர் ரங்கராஜன் தான் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பையும்வகித்து வருகிறார்.
மத்திய அரசுக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தனக்கு வேண்டிய சிலரின் பெயரை ஆளுநர் பதவிக்குபரிந்துரைத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்க வாஜ்பாய் மறுத்து வருகிறார்.
இதனால் பா.ஜ.க.-திமுக இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய ஊரகத்துறை அமைச்சரும், பா.ஜ.க. முக்கியத்தலைவர்களில் ஒருவருமான வெங்கைய்யா நாயுடு கூறுகையில்,
ஆளுநர் நியமனத்தின்போது கடைபிடிக்க வேண்டிய மரபுகளை மத்திய அரசு நிச்சயம் கடைபிடிக்கும்.
எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், சிலர் புரளிகளைக் கிளப்பி விட்டுவருகின்றனர். தீவிரவாதத் தடுப்பு சட்டமான பொடோவை திமுக எதிர்க்கவில்லை. அது தொடர்பாக விவாதிக்கவேண்டும் என்று தான் கருணாநிதி கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பிரதமர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications