ஈரோடு: பெற்றவுடன் மருத்துமனையிலேயே பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த ஒரு பெண் தனக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் அதைஅங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லதா. லதாவுக்கு கடந்த 12ம் தேதிஈரோடு அரசு மருத்துவமனையில் மாலை 6.00 மணிக்கு ஒரு அழகிய பெண்குழந்தை பிறந்தது.
மறுநாள் அதிகாலை அந்தக் குழந்தை நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தது. இதனால் பக்கத்து வார்டில்இருந்தவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அக்குழந்தையின் அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்குகுழந்தை மட்டும் தனியாகப் படுத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் அந்தக் குழந்தையின்தாயைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்தக் குழந்தையின் தாய் கொடுத்த விலாசத்தை வைத்துஅந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடி வருகிறார்கள். ஆனால் அவள் கொடுத்தது உண்மையானவிலாசம்தானா அல்லது போலியான விலாசமா என்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.
தற்போதைய தமிழக அரசு முன்பு கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு மீண்டும் புத்துணர்வுகொடுத்துள்ளது. இருப்பினும் அதையெல்லாம் நாடாமல் இப்படி பெற்றெடுத்தவுடன் குழந்தையைஅனாதையாக்கிவிட்டுச் செல்லும் கொடுமை இன்னும் தொடர்கிறது.
தேனி, உசிலம்பட்டி, சேலம் போன்ற பகுதிகளில்தான் இதுபோன்ற கொடுமைகள் அதிகமாக இருந்தது. தற்போதுஈரோடு பகுதிகளிலும் இந்தக்கொடுமைகள் ஆரம்பித்துள்ளன என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications