ஈரோடு: பெற்றவுடன் மருத்துமனையிலேயே பெண்குழந்தையை விட்டுச் சென்ற தாய்
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வந்த ஒரு பெண் தனக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் அதைஅங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லதா. லதாவுக்கு கடந்த 12ம் தேதிஈரோடு அரசு மருத்துவமனையில் மாலை 6.00 மணிக்கு ஒரு அழகிய பெண்குழந்தை பிறந்தது.
மறுநாள் அதிகாலை அந்தக் குழந்தை நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தது. இதனால் பக்கத்து வார்டில்இருந்தவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அக்குழந்தையின் அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்குகுழந்தை மட்டும் தனியாகப் படுத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் அந்தக் குழந்தையின்தாயைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்தக் குழந்தையின் தாய் கொடுத்த விலாசத்தை வைத்துஅந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடி வருகிறார்கள். ஆனால் அவள் கொடுத்தது உண்மையானவிலாசம்தானா அல்லது போலியான விலாசமா என்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது.
தற்போதைய தமிழக அரசு முன்பு கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு மீண்டும் புத்துணர்வுகொடுத்துள்ளது. இருப்பினும் அதையெல்லாம் நாடாமல் இப்படி பெற்றெடுத்தவுடன் குழந்தையைஅனாதையாக்கிவிட்டுச் செல்லும் கொடுமை இன்னும் தொடர்கிறது.
தேனி, உசிலம்பட்டி, சேலம் போன்ற பகுதிகளில்தான் இதுபோன்ற கொடுமைகள் அதிகமாக இருந்தது. தற்போதுஈரோடு பகுதிகளிலும் இந்தக்கொடுமைகள் ஆரம்பித்துள்ளன என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.












Click it and Unblock the Notifications