தற்காலிக டிரைவர்களால் மேலும் 3 விபத்துகள்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய 3 அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாயின. இந்த விபத்துகளில் 10க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் அரசுப் பேருந்துகள் தற்காலிகமாகஅனுபவம் குறைந்த டிரைவர்களை வைத்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அரசுப்பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.
சேலத்தில் இருந்து திருச்சிக்கு 60 பேரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று எதிரேவந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தஅனைரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சேலம் அன்னதானப்பட்டி மற்றும் ஐந்து ரோடு ஆகிய இடங்களில் 2 பஸ்கள் விபத்துள்ளாயின. இந்தவிபத்துக்களில் 2 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications