முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு பஸ்களை ஓட்ட அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நின்று கொண்டிருக்கும் பஸ்களை இயக்குவதற்காகமுன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த டிரைவர்களை அழைக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு அருகில் இருப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் அதிக பஸ் போக்குவரத்து எப்போதும்இருக்கும்.
தற்போதும் கர்நாடக மாநிலத்திலிருந்து பஸ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதற்காக, முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த டிரைவர்களை அழைத்து அரசு பஸ்களை ஓட்டுவதற்கு தர்மபுரிமாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அனுபவமில்லாத தாற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை ஓட்டுவதற்குப் பதில் இது போல் முன்னாள்ராணுவத்தினரைக் கொண்டு பஸ்களை இயக்குவது நல்லதுதான்.












Click it and Unblock the Notifications