தொடர்கிறது ஸ்டிரைக்... பேச்சுவார்த்தையும் நீடிக்கிறது
சென்னை:
பஸ் ஊழியர்கள், அரசுடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து சனிக்கிழமையும்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து அமைச்சர் நைனார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள், போக்குவரத்துக் கழகதொழிற்சங்க தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை இரவு வரை நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் முடிவு ஏதும்எட்டப்படவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது இறுதிஉடன்பாடு எட்டப்படும் என்றுகூறப்படுகிறது.
20 சதவீத போனஸை உடனடியாக கொடுக்க முடியாவிட்டாலும் கூட முதலில் 10 சதவீத போனஸை அரசு தரவேண்டும். மீதள்ள பத்து சதவீத போனஸை பொங்கல் பண்டிகையின்போது தரலாம் என்று தொழிலாளர்கள்தரப்பில் யோசனை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் அரசுத் தரப்பில் இதை நிராகரித்து விட்டதாகக்கூறப்படுகிறது. அதிகபட்சமாக 12 சதவீத போனஸ் மட்டுமேதர முடியும். அதிலும் கூட 8.33 சதவீதம் மட்டுமே கையில் கொடுக்கப்படும்.
மீதள்ள தொகை வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைதொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. அதுவரை ஸ்டிரைக்கும் தொடரும் என்று தொழிற்சங்கங்கள்அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications