குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் பஸ் ஊழியர்கள்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் மேலும் இரு தினங்களுக்குத் தொடரும் எனவும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 11 தினங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், வேன்களைக் கொண்டு அரசுசமாளித்து வருகிறது.
ஆனால், இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் ஆட்டோக்காரர்கள் மொத்தசம்பளத்தையுமே கட்டணமாகக் கேட்பதாலும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அரசு பஸ் டிரைவர்கள் பாதி நேரம் எதிலாவது மோதிக்கொண்டுள்ளனர்.இதனால் இதில் ஏறவே மக்கள் அஞ்சுகின்றனர்.
இந் நிலைலயில் இன்று சென்னை தாம்பரத்தில் 800க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் மனைவி,குழந்தைகள், பெற்றோருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அதே போல திருச்சியில் 200 போக்குவரத்து ஊழியர்களின் குடும்பங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் மத்தியில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி உள்பட பலர் பேசினர்.
இதே போல சேலம், மதுரை உள்பட அனைத்து இடங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.