கலப்பு மணத் திட்டத்துக்கு கருணாநிதியின் தாயார் பெயர்: நீக்கியது அதிமுக அரசு
சென்னை:
தமிழக அரசின் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டத்துக்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் தாயார் பெயர்நீக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத் திட்டத்துக்கு அன்னை அஞ்சுகம் அம்மையார் திட்டம் என்றுபெயரிடப்பட்டிருந்தது. ஆனால், இதை நீக்கிவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத் திட்டத்தின் கீழ் இரு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் அரசு நிதியுதவி வழங்கிவருகிறது.
தாழ்த்தப்பட்டவர்களும் பிற ஜாதியினரும் கலப்புத் திருமணம் செய்தால் ரூ. 20,000மும், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட, மற்றும் உயர் ஜாதியினர் கலப்புத் திருமணம் செய்தால் ரூ. 10,000மும் உதவித் தொகைவழங்கப்படுகிறது.
திட்டம் நல்ல திட்டம் தான் என்றாலும் அதற்கு திமுக தலைவர் தனது தாயாரின் பெயரை வைத்தார். இது திமுகஆட்சியில் மட்டுமல்ல எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் இது போல நடந்ததுண்டு.
ஜெயலலிதா தான் எல்லோருக்கும் ஒருபடி மேலே சென்று தனது பெயரையே எல்லாவற்றுக்கும் வைத்தார்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பெயரில் இருந்த அனைத்துத் திட்டங்களையும் பெயர் மாற்றினார்.ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்தின் பெயரும் மாற்றப்பட்டது.
இப்போது மீண்டும் ஆட்சி அதிமுகவிடம். இதையடுத்து கருணாநிதியின் தாயார் பெயரில் இருக்கும் அரசின்திட்டம் உடனடியாக மாற்றப்படுகிறது.
இந்தத் திட்டம் இனிமேல் தமிழக அரசு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்று தான் அழைக்கப்படும்.