நிதி நெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களிடம் அறிக்கை கேட்கிறார் பன்னீர்
சென்னை:
தமிழக நிதி நெருக்கடியை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அணைச்சர்களும் இன்னும் 1 வாரத்தில் அறிக்கை தரவேண்டும் என முதல்வர் பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் பேசுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பது குறித்துஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, நிதி நெருக்கடியை சமாளிப்பது, வருவாயைப் பெருக்குவது ஆகியவை குறித்து இன்னும் 1 வாரத்தில் அனைத்துஅமைச்சர்களும் அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
வீரப்பன் தேடுதல் வேட்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது. அதிரடிப்படை வாபஸ் பெறப்பட மாட்டாது.வீரப்பன் கடந்த காலங்களில் ஆடிய நாடகங்களை நாங்கள் மறக்கவில்லை. அது இனிமேல் தொடராது.
பஸ் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கும் நோக்கம் இல்லை என்றார் அவர்.