தீவிரமடைகிறது பஸ் ஸ்டிரைக்: அரசியல் கட்சிகளுடன் சங்கங்கள் ஆலோசனை
சென்னை:
வரும் 23ம் தேதி தாங்கள் நடத்தவிருக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு அரசியல் கட்சிகளுடன்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
20 சதவீத போனசை அரசு வழங்க வேண்டுமென்று கோரி கடந்த 11 நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள்வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களுடைய குடும்பத்தினரும் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து,வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களும் இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவையும் நாடப் போவதாக போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இதன் அடிப்படையில் இன்று (திங்கள்கிழமை) காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் (மதிமுக)பிரதிநிதிகளை அவர்களுடைய அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள்சந்தித்தனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் போக்குவரத்துக் கழக ஊழியர்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications