Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் வளர்மதியிடமிருந்து அதிமுக மகளிர் அணித் தலைவி பதவி பறிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் வகித்து வந்த அதிமுக மகளிர் அணித்தலைவி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வளர்மதிக்கு பதிலாக அந்தப் பதவியில் ராஜ்யசபா எம்.பியான கோகுலம் இந்திரா நியமிக்கப்பட்டுள்ளார் என்றுஅறிவித்துள்ளார்.

வளர்மதி ஜெபராஜ் தொடர்ந்து விவகாரமான செய்திகளில் அடிபட்டு வருபவர். முன்பு மூத்த அதிகாரியொருவரைசெருப்பு வாங்கி வரச் சொன்னதாக புகார் எழுந்தது.

பின்னர் அவரது தம்பி அடாவடியாக பலரிடம் பண வசூலில் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது.

இதற்கெல்லாம் உச்சமாக கடந்த வாரம் அமைச்சரின் உதவியாளர் சண்முகசுந்தரம் என்பவர் மீது அமைச்சரின்தம்பியே கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மதுரையில் நக்கீரன் பத்திரிக்கையில் நிருபராக இருந்த சண்முகசுந்தரம் வளர்மதி அமைச்சரான பின்னர் வருக்குஉதவியாளரானார். ஆனால், இவருக்கும் வளர்மதியின் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

தனது அக்காள் வளர்மதியை சண்முகசுந்தரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக புகார் கூறிய அவரது தம்பி,இரு வாரங்களுக்கு முன் ரெளடிகளுடன் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினார். இதில் சண்முகசுந்தரம்பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

இதையடுத்து தனது தம்பியையே கைது செய்யச் சொன்னார் வளர்மதி.

இப்படி தொடர்ந்து பத்திரிக்கை செய்திகளில் அடிபட்டு வரும் வளர்மதி மீது இப்போது ஜெயலலிதா நடவடிக்கைஎடுத்துள்ளார்.

இவர் கடந்த தேர்தலில் மதுரையில் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனை வென்று எம்.எல்.ஏ. ஆனவர்என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+