திருவண்ணாமலை தீபத் திருவிழா: நாளை கொடியேற்றம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி நாளைஅங்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும். இதற்காக 2,500 அடி உயர மலை உச்சியில் உள்ள ராட்சத விளக்கில் நெய் தீபம்ஏற்றப்படும்.
உலகப் புகழ்பெற்ற இந்தத்திருவிழாவைக் காண இந்தியா முழுவதிலும் இருந்தது பக்தர்கள் திருவண்ணாமலைக்குவருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில்ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் தீபத்திருழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக 260 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் மார்ச் மாதம் நடைபெம் என்று தமிழக இந்துஅறநிலையத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக தீபத் திருவிழா காட்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்துவந்த "சன்" டிவிக்கு இந்த ஆண்டுஅனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications