For Daily Alerts
Just In
பஸ் ஊழியர் குடும்பங்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.
20 சதவீத தீபாவளி போனஸைக் கோரி ஸ்டிரைக்கில் இறங்கியுள்ள பஸ் ஊழியர்கள், தங்களது போராட்டத்தைத்தீவிரப்படும் வகையில் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு அவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மதுரை மற்றும் கோவையில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மதுரை அரசரடி பகுதியில் பஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கோவையில் 130 பெண்கள் உள்பட 600பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
Comments
Story first published: Tuesday, November 20, 2001, 5:30 [IST]